கேட்கும் திறன் குறைபாட்டை புரிந்து கொள்ளுதல்.

சிறந்த சிகிச்சையைக் கண்டறிய, காது கேளாமை பற்றிய புரிதல் முக்கியம். நீங்கள் உரத்த ஒலியை எழுப்புகின்றபோது, சத்தம் மெதுவாக கேட்கும் என்றால் வயது காரணமாக உங்கள் கேட்டல் திறன் குறைவடைகின்றது என்று அர்த்தம். கேட்கும் திறன் இழப்பு என்றால் பேச்சு ஒலிகளைக் கேட்கும் திறனை நீங்கள் இழந்துவிட்டீர்கள். கேட்கும் திறன் இழப்பு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இருக்கலாம். மேலும் உயர்ந்த அதிர்வெண் ஒலிகள் அல்லது ஒற்றை பேச்சு ஒலியைக் கேட்பதில் உங்களுக்கு சிரமம் இருக்கலாம். காது கேளாதலின் அளவைப் பொறுத்து செவிப்புலன் இழப்பை நான்கு வகைகளாக வகைப்படுத்தலாம்.

woatamil
படிநிலை

01

மெல்லிய குறைபாடு

சில பேச்சு ஒலிகளைக் கேட்க முடியும். ஆனால் மென்மையான பேச்சு ஒலிகளைக் கேட்பது கடினம்.

படிநிலை

02

நடுத்தரம்

சாதாரண உரையாடல் மட்டத்தில் இருக்கின்றபோது உரத்த சத்தங்களைக் கேட்பதில் சிக்கல்.

படிநிலை

03

கடுமையான நிலை

சாதாரண உரையாடல் மட்டத்தில் இருக்கின்றபோது உரத்த சத்தங்களைக் கேட்பதில் சிக்கல்.

படிநிலை

04

தீவிரமான நிலை

எந்த மட்டத்திலும் எந்த பேச்சு சத்தத்தையும் கேட்க முடியாது.

woatamil

கேட்கும் திறன் பரிசோதனை எவ்வாறு நிகழ்கிறது?

கேட்கும் சோதனைகள் ஒரு ஒலி எதிர்ப்பு கொண்ட அதிநவீன ரெக்கார்டிங் ஸ்டுடியோ அறையில் நடத்தப்படுகின்றன. மேலும் உங்களுக்கு காது போன்கள் வழங்கப்படும். சோதனையின்போது, வெவ்வேறு அதிர்வலைகளை கொண்ட சத்தங்களை கேட்கும்படி கோரப்படுவீர்கள். ஒன்று அல்லது இரண்டு காதுகளும் செவித்திறனை இழந்துவிட்டதா என்பதை இந்த சோதனை மூலம் கண்டறியலாம்.

நீங்கள் செவிப்புலன் பரிசோதனையில் தோல்வியடைந்தால் என்ன ஆகும்?

செவிப்புலன் பரிசோதனையில் தோல்வியுற்றால் நீங்கள் பயப்பட வேண்டாம். அமைதியாக இருப்பது முக்கியம். அடுத்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் நிபுணர்கள் உங்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள். நீங்கள் செவிப்புலன் சோதனையில் தோல்வியுற்றால், உங்கள் பரிசோதனை முடிவு இரண்டு வகையாக வகைப்படுத்தப்படும். அதாவது கடத்தும் செவிப்புலன் இழப்பு (நடு அல்லது வெளிப்புற காது) அல்லது உணர்திறன் நரம்பியல் செவிப்புலன் இழப்பு (உள் காது) என வகைப்படுத்தப்படும். செவிப்புலன் பராமரிப்பு நிபுணர்கள் உங்கள் இந்த நிலையை சிறந்த சிகிச்சையுடன் எவ்வாறு தீர்க்கலாம் என்பது தொடர்பாக உங்களுக்கு வழிகாட்டுவார்கள். உங்கள் தேவைக்கு ஏற்ப குறிப்பிட்ட சிகிச்சை அளிக்கப்படும்.

woatamil
woatamil

நீங்கள் எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்?

காது கேளாமை தொடர்பான அறிகுறிகள் தென்படுகின்றபோது நீங்கள் ஒரு மருத்துவரை பார்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியம். ஒரு காது சம்பந்தமான நிபுணர் ஒருவரை பார்ப்பதற்கான சில காரணங்கள் சில இங்கு தரப்படுகின்றன. காதுகளில் சத்தம் கேட்டல் அல்லது கடுமையான காது வலி, அதிகப்படியான காது மெழுகு, அல்லது திடீரென கேட்கும் திறனை நீங்கள் இழக்கும்போது அல்லது இந்த அறிகுறிகளில் ஒன்றை நீங்கள் உணர்ந்தால், தாமதமின்றி எங்கள் செவிப்புலன் நிபுணர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

நவீன செவிப்புல தொழில்நுட்பம்

உலகளாவிய போக்கு தொடர்ந்து மாறி வருவதால், தொழில்துறையின் தொழில்முறை தரத்தை உயர்த்துவதற்காக அதிநவீன செவிப்புலன் தொழில்நுட்பத்தை நாம் இலங்கைக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம். எங்கள் நவீன கேட்கும் கருவிகள் IPhones, IPad மற்றும் IPods என்பவற்றுடன் பொருந்தி உங்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கக் காத்திருக்கின்றன. உங்கள் தொலைபேசி அழைப்புகள் மற்றும் இசை என்பவற்றை நேரடியாக தொடர்புபடுத்தி கேட்கும் வசதிகளும் இதில் காணப்படுகின்றன.