woatamil

ஆப்டிகல் கோஹரன்ஸ் டோமோகிராபி (OCT)

ஆப்டிகல் கோஹரன்ஸ் டோமோகிராபி என்பது விழித்திரையின் குறுக்கு வெட்டு படங்களை பிடிக்க நடத்தப்படும் ஒரு சோதனை நுட்பமாகும். இது முதுமை காரணமாக ஏற்படும் மேக்குலா சிதைவு, நீரிழிவு தொடர்பான நிலைமைகள், விழித்திரையின் நோய், பார்வை குறைபாடு அல்லது பார்வை இழப்பு போன்ற நிலைகளை கண்டறிய உதவுகிறது.

காட்சி புலம் (by Zeiss)

இந்த பரிசோதனையானது குளுகோமா, பக்கவாதம், மூளைக் கட்டிகள் மற்றும் வேறு ஏதேனும் நரம்பியல் பிரச்சினைகள் போன்ற மருத்துவ நிலைமைகளால் கண்களில் ஏற்படக்கூடிய மைய மற்றும் புறக் பார்வைக் கண்ணோட்டத்தைக் கண்டறிய முடியும்.

விளித்திரை பரிசோதனை

போட்டோகெராடோஸ்கோபி அல்லது வீடியோ கெரடோகிராபி (videokeratography) என்றும் அழைக்கப்படும் கார்னியல் டோபோகிரபி (Corneal Topography) என்பது  நம் கண்ணின் வெளிப்புற அமைப்பான விளி வெண்படலத்தை  வலியற்ற விதத்தில் படம் பிடிக்கும் நுட்பமாகும். இது கண்புரை  அறுவை சிகிச்சை, ஒளிவிலகல் அறுவை சிகிச்சை மற்றும் கெரடோகோனஸ் போன்ற விளித்திரையில் உள்ள  நோய் அறிகுறிகளை கண்டறிய  உதவுகிறது.

முன் அலை பகுப்பாய்வு

முன் அலைப் பகுப்பாய்வானத்து, கார்னியல் அலைமுனை தரவை அளவிடுவதுடன்  கண்ணின் குறைபாடுகளை அடையாளம் காணவும் உதவுகிறது. ஒளிவிலகல் பிழையை சரிசெய்ய மற்றும் இரவு பார்வையை மேம்படுத்துவதற்க்கும்,  லேசர் கண் அறுவை சிகிச்சை செய்வதற்கும்  நோயறிதல் மற்றும் கண் சிகிச்சை செய்வதற்கும் இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.

டோனோமெட்ரி

டோனோமெட்ரி என்பது உங்கள் கண்களுக்குள் இருக்கும் அழுத்தத்தை அளவிடுவதற்கான ஒரு சோதனையாகும்.  இது  கண் அழுத்த நோயை கண்டறிவதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் கண் அழுத்த நோய் காது கேளாமைக்கு வழிவகுக்கும்.

ஆண்டுதோறும் கண் பரிசோதனை செய்துகொள்வது முக்கியமா?

தொழிநுட்ப முன்னேற்றத்தின் விரைவான வளர்ச்சியின் காரணமாக, மக்கள் முன்னெப்போதையும்விட கணனி மற்றும் கைப்பேசி போன்றவற்றின் திரைகளைப் பார்ப்பதில் அதிகம் நேரத்தைச் செலவிடுகின்றார்கள். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இது பொதுவானதொரு நிலைமையாக மாறிவிட்டது. எனவே, கண்பார்வை சிறப்பாகவும் தெளிவாகவும் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியம். ஆரம்ப கட்டத்தில், பார்வைக் குறைபாடுகளை அடையாளம் காண்டால், அவற்றிற்கு சிறந்த தீர்வுளையும் சிகிச்சைகளையும் எளிதாகவும் வினைத்திறனாகவும் வழங்க முடியும்.

கண் பரிசோதனையின்போது எதிர்பார்க்கப்படும் விடயங்கள் யாவை ?

கண் பரிசோதனையின்போது என்ன நடக்கிறது என்பது குறித்து விழிப்புடன் இருப்பது முக்கியம். உங்கள் பார்வையின் வெவ்வேறு பகுதிகளைச் சோதிக்க கண் நிபுணர்கள் பலவிதமான பரிசோதனைகளை மேற்கொள்வார்கள். வர்ணங்களைப் பிரித்தறிவதில் உள்ள குறைபாடுகளை சரிபார்க்கும் குருட்டுத்தன்மை பரிசோதனைகள், சோர்ந்து காணப்படும் கண்ணை அடையாளம் காணும் முழுமையான பரிசோதனைகள் (cover tests), கூர்மையான பார்வையை சரிபார்க்க செய்யப்படும் ஸ்டீரியோப்சிஸ் சோதனைகள்  (stereopsis tests) மற்றும் பார்வைத் தெளிவுகளை பரிசோதிக்கும் சோதனைகள் என்பன அவர்களால் மேற்கொள்ளப்படும்.

உங்கள் கண் சிகிச்சை நிபுணரைத் தெரிவு செய்யும் முன்னர் நீங்கள் கருத்திற் கொள்ளவேண்டிய விடயங்கள் யாவை?

விழிப்பார்வைத் தேர்வாய்வாளர் (Optometrists) மற்றும் கண் மருத்துவர் (ophthalmologists ) என இரண்டு வகையான கண் சிகிச்சை நிபுணர்கள் காணப்படுகின்றார்கள். விழிப்பார்வைத் தேர்வாய்வாளர்கள் உங்கள் கண் பாரவையைப் பரசோதித்து, ஒளிவிலகல் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்குரிய கண்ணாடிகளை பரிந்துரை செய்வார்கள். கண் மருத்துவர்கள் கண் தொடர்பான நோய்களைப் பரிசோதித்து அவற்றிற்கான சிகிச்சைகள் மற்றும் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வார்கள்.

சன்கிளாசஸ்களை (Sunglass) வாங்கும்போது நீங்கள் கவனத்திற் கொள்ளவேண்டிய விடயங்கள் யாவை?

மனிதர்கள் நவ நாகரிக மோகங்களுக்காக சன்கிளாசஸ்களைப் பயன்படுத்தினாலும், அவற்றை சரியான முறையில் தெரிவு செய்யாவிட்டால், அவை நீண்ட கால மற்றும் குறுகிய கால கண்பார்வைக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.  எனவே நீங்கள் அணியும் சன்கிளாஸ்கள் 100%  அல்ட்றா வயலட் கதிர்ளை (UV) முறியடிக்கின்றதா என்பதைக் குறிக்கும் ஸ்ரிக்கர்கள் அல்லது டாக்குகள் (tag) இடப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். மேலும் அளவைவிடப் பெரிதான சன்கிளாசஸ்களை அணிவதால் இருபக்கத்திலும் இருந்து வருகின்ற அல்ட்றா வயலட் கதிர்களைத் தவிர்க்கலாம்.

woatamil

கண் ஆரோக்கியத்திற்கான சில குறிப்புக்கள்

“உங்கள் கண்களே உங்கள் ஆன்மாவின் சாளரங்கள்”. எனவே உங்கள் கண்கள் மட்டில் நீங்கள் அதிக அக்கறை செலுத்தவேண்டும். அநேகமானோர் கண்நோய்கள் தொடர்பாக ஏற்படும் அறிகுறிகளை அசட்டை செய்கிறார்கள். எனினும் ஆரம்ப கட்டத்திலேயே கண் குறைபாடுகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வது முக்கியமாகும்.

உங்கள் கண்பார்வயைப் பாதுகாத்துக்கொள்வதற்கு அநேகம் வழிமுறைகள் உள்ளன. உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள் கண்பார்வையை ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் பேணிக்கொள்ள இதோ சில முக்கியமான வழிமுறைகள்...

01

ஒமேகா – 3 அடங்கிய பழங்கள், காய்கறிகள் மற்றும் மீன் என்பனவற்றை உள்ளடக்கிய சமச்சீரான உணவுளை உண்ணுதல்.

02

தினசரி உடற்பயிற்சிகள் மூலமாக நீரிழிவு மற்றும் உயர் குருதி அழுத்தத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடிவதோடு, அதன் காரணமாக ஏற்படும் கண்பார்வைக் கோளாறுளையும் கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

03

கட்ராக்ட்ஸ் போன்ற கண்நோய்களை ஏற்படுத்தக்கூடிய புகைப்பழக்கத்தை முற்றாக தவிர்த்துவிடுதல்.

04

அல்ட்டறா வயலட் கதிர் தாக்கங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பொருத்தமான சிறந்த மூக்குக் கண்ணாடிகளை அணிதல்.

05

அதிகளவான நேரங்களை கணனித் திரைக்கு முன் செலவழிக்கும் நபராக இருந்தால் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு தடவை கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்.

06

கண்நோய்கள் ஏற்பட்டுள்ளதா என்தை அறிந்துகொள்ளவும் ஆரம்பத்திலேயே அதனைத் தடுத்துக்கொள்ளவும் உங்கள் கண் மருத்துவரிடம் முறையான பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்.